Wednesday, March 2, 2016

கடல்

காது மடலோரம் 
ஓயாது தணல் மூட்டும்
பெருமூச்சின் ஓசை
யாசித்து
வந்து சேரும் விழிகளில்
உப்புக்கடல்
ஒரு வனவிலங்கின் சாயல்
அதற்கு
அச்சமும் களிப்பும்
சுழன்று துள்ளும் இடம்
மோட்சத்தின் திறப்பு
முதல் அணுவைத் தேடி நனைக்கும்
சூட்சமத்தில்
நீராடல் என்பதன் முழு அர்த்தம்
நாசி நுழைந்து நரம்பில் ஏறி உதிரம் கலந்து
மெல்ல மெல்ல உப்பே உறுவாகி
மின்னுகையில்
விலாவில்
முளைக்கத்தொடங்குகிறது
சிறகு
***

No comments:

Post a Comment