Thursday, December 24, 2015

பெரு உதட்டுக்காரி

முன்னேற முன்னேற தீராமல் நீளும் பெருவனம்
சிற்றோடைகள் பின்னிக்கசியும் ஈரநிலம்
நெகிழ்ந்து உள்ளிழுக்கும் ஆற்று மணல்
வண்டுகள் தள்ளாடும் மகரந்தப்படுக்கை

நீங்கள்
என்றேனும்
எரிமலையின் வாசல் நெருங்கியதுண்டா?
ஒளி தீண்டா கடல் அடி நிலம் அறிவீரா?

சிற்றெறும்புகள் மண்டியிட்டு
அருந்திச்சாகும் தேன் குளம்
என்பதாக
இப்பெரு உதட்டுக்காரியின் வரலாறு தேசம் தாண்டுகிறது

No comments:

Post a Comment