Tuesday, September 1, 2015

*தப்புத் தாளங்கள்*


வேற்று கிரகம் 
அங்கு
நீல உடலுடன் 
வால்முளைத்த மனிதர்கள் இல்லை
உன்னைப்போல் தான் அவர்கள்
அல்லது
அவர்களைப் போல்  நீ 

இருண்ட தேசம் அது 

கிளர்ச்சி மிகுந்தது
இருள் தரும் துணிச்சல் 

அங்கு
காதல் கனி அழுகி மிதிபடும்
வழியெங்கும் 

நடுச்சாலையில்
கரமைதுனம் மிக சகஜம் 

உடனடி ஒப்பாரியும்
உடனடி ஆரவாரமும் கூட 

கருணை மழை
சொட்டுச் சொட்டாய்
வழிந்தபடியே இருக்கும் அங்கு 

புஜம் புடைக்க
கண் சிவக்க
கர்ஜிக்கையில்
உங்கள் மயிரும்
வீறிட்டுக்கொண்டு நிற்கும் அறிவீரா?!

கண் விழித்ததும் காட்சி மாறும்
கனவு லோகம் அது 

பச்சை நிறத்தில்
மின்னும் விழிகளை 
பார்க்கும் வேளையில்
உன் விழி நிறமும்
அதுவே என்பதறிவாய்  

அத்தனையும் வெளிச்சமிட்டுக் காட்டும்
அற்புத இருள் அது 

***
நன்றி :திணை இதழ் 

No comments:

Post a Comment