Thursday, June 18, 2015



கோடைக் கால
மதியப் பொழுதொன்றில்
ஒரு சொல்லை முறித்து
வடகிழக்காக வீசிவிட்டு
நாம் பிரிந்துசென்றோம்
நறுமணத் தைலம் வீசும்
பொன்னிறப் பெட்டியை
ஏந்தியபடி
நீ திரும்பி
வந்திருக்கிறாய்
இவ்வசந்த கால அந்தியில்
என்னிடம் இருப்பதெல்லாம்
பதப்படுத்தப்பட்ட
உடைந்த
அச்சொல் மட்டுமே
***

No comments:

Post a Comment