Sunday, February 1, 2015



திருவிழாக் கூட்டத்தில்
குழந்தைகளின்
கூச்சலுக்கு இடையே
பஞ்சுமிட்டாய்காரனின் 
மணியோசைக்கு நடுவே
மலர்மணக்கும்
வீதியில்
சிரிப்பொலிக்கும்
வளையல்களின் சிணுங்களுக்கும்
செவிமடுத்தபடி
மௌனித்துக் கிடக்கிறது
அச்சு முறிந்த
அழகியதொரு
ராட்டினம்
***

No comments:

Post a Comment