Thursday, July 17, 2014



இரக்கமின்றி பொழிகிறது
இந்த மழை

முரட்டுக்கோபக்காரனைப்போல
சீறிக்கொண்டுவரும்
வெயிலை
நெஞ்சோடு அணைத்துக்கொள்வதில்
யாதொரு அச்சமும் இல்லை

காதோரம் கிசுகிசுத்து
கள்ளப்புன்னகையில் கிறங்கச்செய்து
உயிரைத்தின்று உருக்குலைக்கும்
மழையை
அஞ்சி ஒடுங்குகிறேன்

உன் ஈரத்தைப்
பொறுக்கிக்கொண்டு
வெளியேறு

வாள் ஏந்தி வருவான்
ஓர் தணல்வீரன்

எரிந்து தழைக்கட்டும்
என் உப்பு மேனி
 

****

No comments:

Post a Comment