Tuesday, July 15, 2014

நிலமெங்கும் ஊறும் ஈரம்




இம்மழைக்காலம்
மேலும் பிணிசேர்க்கிறது

நிலமெங்கும் ஊறும் ஈரம்

கால்களை வயிற்றில் குறுக்கி
சுருண்டிருக்கிறேன்

சர்ப்பங்கள் இரண்டு
பாதங்களில் குடைந்து ஏறி
இடையில் ஓங்கி கொத்திவிட்டு
வயிற்றில் சுருண்டு முறுக்குகின்றன

போர்வைக்குள் சுழலும் வெப்பத்தில்
அம்மாவின் மடிச்சூடு
கொஞ்சமும் இல்லை

மற்றுமொரு திங்கள் என்று
நகரும் காலத்திடம்
எங்கனம் சொல்வேன்

சும்மாவேணும் கொஞ்சம்
அருகில் அமர்ந்திரு என்று.


*****

No comments:

Post a Comment