Saturday, June 7, 2014

பூர்த்தி


வறண்ட
என் கர்ப்பச்சுவற்றுக்கு
கொஞ்சம் ஈரம் பூசி வைக்கிறேன்
 
ஒரு கவிதையை பிரசவிக்கும்
எத்தனிப்புடன்
 
கொஞ்சும் குழந்தை

108 சுற்று,
பலர் சுற்றி வந்த
பாதை தான்.
 
வெறுமை வானம் 
 
மேலும் இறுக மூடிக்கொள்கிறது
கருவறை
 
நிச்சலன பெருங்கூட்டில்
நான் தளர்ந்து வீழ்கையில்
கதவுடைத்து நுழைகிறது
முரட்டுத் தனிமை ஒன்று
 
***

நன்றி: யாவரும்.காம்

No comments:

Post a Comment