Wednesday, May 28, 2014

அதிர்ந்த கனவின் ஒற்றையடி நீள்பாதை




அங்கிருந்து
திரும்பிய நாளில் தான்
முடிவு செய்தேன்
என் நாவை
முடமாக்குவது என்று

கால் உடைக்கப்பட்ட நாவு
வன்மம் வளர்த்தது

கூன் விழுந்த என் முகத்தில்
அது
ஓயாமல் காறி உமிழ்ந்தது

யாரும் அறியாமல்
துடைத்துக்கொண்ட முகத்தில்
நான்
ராஜக்களையை ஏற்ற முயன்றேன்

என் இதயத்துடனான
முடநாவின் முணுமுணுப்பில்
ஏதோ சதி இருப்பதாய்
அஞ்சினேன்

நடுநிசிப்பொழுதொன்றில்
அது
என் தலைமயிரை சிரைக்க
முயல்கையில்

இதயத்தைக் கொன்றுப் புதைக்க
நான் துணிந்திருந்தேன் 

***
நன்றி: யாவரும்.காம் 

No comments:

Post a Comment