Tuesday, March 18, 2014

அவ்வளவே




சிறை சிக்கியவனின் முகத்தில் சிறுநீர் கழிப்பதுபோல 
இயலாமையைச் சீண்டி விளையாடுகிறது இப்பெருவாழ்வு

நெஞ்சுக்கூட்டில் முட்டி அழும் இதயத்தின் குரல்
தலைமயிர் சிரைக்கப்பட்ட பெண்ணின்
கூக்குரலாய் ஒலிக்கிறது

இரவே
என் சதை கிழிந்து உதிரம் கொட்டும் வரை
உன் சாட்டை சுழற்று
பின் ஓய்ந்து உறங்கிப்போ


*******



No comments:

Post a Comment