Thursday, March 13, 2014

காலங்களைக் கடந்து வருபவன்


பருவங்களை மலர்த்துபவன் 
காலங்களைக் கடந்து வருகிறான் 

வேர் அறியா நிலம்ஒன்றில் 
வெடித்து நிற்கிறது 
படகு 

பாசி படர்ந்த அவன் பாதங்களில் 
தலைப்பிரட்டையின் துள்ளலுடன் 
முயங்கத்தொடங்குகிறேன் 

அவன் புன்னகையின்
சாரலில் 
அசைந்து நெகிழ்கிறது படகு 

குமிழிகளென உருளும் கூழாங்கற்களில் 
ஆணிவேரின் பச்சைவாசனை 

நீர்ச்சுழிகளை ஸ்தம்பிக்கச்செய்யும்
அவன் 
மேல் நோக்கிச் செலுத்துகிறான்
நதிகளை

உருகத்தொடங்கும் 
பனிமலையின் உச்சியில் 
செங்கரும்புக்கொடியினை 
நாட்டிச்செல்பவன்
காலங்களைக் கடந்து வருகிறான் 
 
*****
செ.சுஜாதா.
நன்றி :உயிர் எழுத்து இதழ்.

No comments:

Post a Comment