Monday, August 26, 2013

அங்கிருந்த காட்சிப்பிழை




வலிய உன் கரங்கள் 
மேகத்தை உருட்டி இறுக்குகின்றன 

மற்றுமொரு
இரவை
அடிவயிற்றில் எத்தி முடுக்குகிறாய் 

அழுந்தும் உன் ஆள்காட்டி விரலில்
கசியத்தொடங்குகின்றன
நட்சத்திரங்கள் 

கங்காரு நடையின் தோற்றமுடைய
உனது 
இப்பயணத்தில்
சிதைகின்றன
பறவையின் வழித்தடங்கள் 

மருண்டு தேயும் பிறைநிலவை 
நீ நிமிர்ந்து காண எத்தனிக்காதே 

எறும்புகள் ஊரும்
விறைத்த  காட்டு மானின் 
விழிகளை அங்கே நீ காணக்கூடும்

***
செ.சுஜாதா,
நன்றி: நவீனவிருட்சம் .

No comments:

Post a Comment