Saturday, August 3, 2013

கட்டமைப்பின் இசைவு






அறுந்து விழுதலின் சாத்தியங்கள் உரைக்கும் 
அந்தப் புராதன பாலத்தின் கிரீச் ஒலி தொட்டு 
உறைந்த என் ஐம்புலன்கள்
பயணத்தின் பாதைதோறும் கிடக்கின்றன 

துள்ளிச்சரியும் தூரத்து சிற்றருவி
தன் கூதல் ஒலி நீட்டி 
கன்னத்து ரோமத்தை நெருடுகிறது 

நீண்டு நெளியும் 
ஓர் புராதன தொங்குப் பாலத்தில் 
நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்

புணர்தலை கலையாக்க முயலும் 
ஊமைக்கலைஞனின் உளிப்பேச்சு
அப்பாறையெங்கும் சரிந்து அசைகிறது 

முக்கி முக்கி
களைத்த தாய் மீன்கள் 
கொஞ்சம் சூரியனை பருகவெண்ணி
கூழாங்கல் ஏறுகின்றன 

கூட்டு நடனம் ஒன்றை 
இயற்றிக்காட்டியபடி பறவைக்கூட்டம் விண் வென்று 
கரையேகுகின்றன 

****
நன்றி: கீற்று இணைய இதழ் 


No comments:

Post a Comment